
புதுடெல்லி: அரசியலில் தனக்கு ஆர்வமில்லை என்றும். பிரதான கட்சிகளில் இருந்து அழைப்பு வந்ததாகவும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். 2024-ல் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சேவாக் நாடாளுமன்ற உறுப்பினராக விரும்புகிறார் என பயனர் ஒரு எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். அதற்கு அவர் இப்படி பதில் அளித்தார். முன்னதாக, எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, “ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். நாம் அனைவரும் பாரதியர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். நமது அசல் பெயரான 'பாரத்' என்பதை அதிகாரபூர்வமாக திரும்ப பெற நீண்ட தாமதமாகிவிட்டது. இந்த உலகக் கோப்பையில் நமது வீரர்கள் பாரதத்தை நெஞ்சில் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிசிசிஐ மற்றும் ஜெய் ஷாவை நான் கேட்டுகொள்கிறேன்” என தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/PMUFv8H