ஆசியக் கோப்பை: கேள்விக்குறியான இந்தியப் பந்து வீச்சு!

நேபாளத்தை வீழ்த்தி ஆசியக் கோப்பை 2023 தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றது, இயற்கை அன்னையின் அருளினால். ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் இந்தப் பவுலிங்கை அடித்து நொறுக்கியதில் பேசுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இந்திய பேட்டிங்கில் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் எல்லாமே சுமாராகத்தான் இருக்கும் நிலையில் பவுலிங்கும் நேற்று சற்றே பின்னடைவு கண்டதைத்தான் பார்க்க முடிந்தது. பீல்டிங் பற்றி சொல்லவே வேண்டாம். 3 கேட்ச்களை முதல் 5 ஓவரில் ட்ராப் செய்தால் அந்த அணி கோப்பையை வெல்ல தகுதியான அணியா என்பதே நம் கேள்வி.

விராட் கோலி ஜிம்மில் செய்யும் சாகசங்களையெல்லாம் நொடிக்கு நூறு தரம் காட்டுகின்றனர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் அவர் பீல்டிங் பிராக்டீஸ் செய்வதை ஏன் காட்ட மறுக்கின்றனர். அவரும் ஒரு கேட்சை நேற்று விட்டார். நேபாள அணி பாகிஸ்தானுக்கு எதிராக சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கின்றது, ஆனால் இந்திய பவுலிங்கிற்கு ஏதிராக 10ஓவர்களில் 65/0 என்று ஆடுகின்றனர். பவுலிங் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரி என்ன செய்து கொண்டிருக்கிறார்?



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/O0HTY7r