சதம் எடுப்பதற்காக வேண்டுமென்றே ‘ஸ்லோ’வாக ஆடுவதா?- ஷுப்மன் கில், ஸ்ரேயஸ் மீது எழும் விமர்சனங்கள்!

மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில் நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி பந்தாடியது, இதில் காயத்திலிருந்து மீண்டு வந்த ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் ஷுப்மன் கில் இருவரும் அதிரடியாக ஆடி சதங்கள் எடுத்தனர். ஆனால் இருவருமே தங்கள் சொந்த சதத்தை எட்ட தங்களது 85 ரன்களிலிருந்தே ஆட்டத்தை மந்தப்படுத்தினர். இது தெளிவாகவே தெரிந்தது. நமக்குத் தெரிந்தது ரசிகர்களுக்கும் தெரிகிறது, பண்டிதர்களும் உணர்ந்தனர், இதனையடுத்து அய்யர், கில் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஸ்ரேயஸ் அய்யர் 90 பந்துகளில் 105, ஷுப்மன் கில் 97 பந்துகளில் 104 ரன்கள் விளாச, பிற்பாடு சூரியகுமார்யாதவ் 37 பந்துகளில் 6 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 72 ரன்களை விளாச கேப்டன் கே.எல்.ராகுல் 38 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். இந்தியா 399 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. சூரியகுமார் யாதவ் கேமரூன் கிரீனின் ஒரே ஓவரில் முதல் 4 பந்துகளில் 4 சிக்சர்களை விளாச மீண்டுமொரு 6 சிக்சர்கள் அடிக்கப்படும் என்று ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பார்ப்பு ஆனால் கிரீன் தப்பினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/JCAtUlo