“எங்களுக்கு பரிச்சயம் இல்லா இந்திய களச் சூழல் குறித்த கவலை இல்லை” - பாபர் அஸம்

லாகூர்: எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் பரிச்சயம் இல்லா இந்திய ஆடுகளச் சூழலில் விளையாடுவது குறித்து தங்களுக்கு கவலை இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அஸம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 டி20 உலகக் கோப்பை தொடரில் கடைசியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்தியாவில் விளையாடி இருந்தது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மற்றும் அரசியல் நிலைபாடு காரணமாக பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் நேரடி கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவது இல்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணி வீரர்கள் ஐபிஎல் தொடரிலும் விளையாடுவது இல்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/oBOc39b