கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு அறிவித்திருந்த தமிம் இக்பால் பிறகு வங்கதேச பிரதமரின் தலையீட்டினால் ஓய்வை முடித்துக் கொண்டு மீண்டும் ஆட வந்தார். இந்நிலையில், இவருக்கும் கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கும் மோதல் முற்றியதால், தமிம் இக்பாலை அணியில் சேர்க்க ஷாகிப் விரும்பவில்லை என்ற விவகாரம் பெரிய சர்ச்சைகளை அங்கு கிளப்பியுள்ளது.
அதாவது, தமிம் இக்பால் உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் மட்டும்தான் ஆட முடியும் என்று கூறியதாகவும், ஃபிட்னெஸ் இல்லாதவரை எடுக்கக் கூடாது என்றும், மீறி எடுத்தால் தான் உலகக் கோப்பை அணியிலிருந்தே விலகிவிடுவேன் என்றும் ஷாகிப் மிரட்டியதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், தமிம் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தன்னை மிடில் ஆர்டரில் இறங்க ஷாகிப் வலியுறுத்தியதாகவும், 5 போட்டிகளில் மட்டுமே ஆட முடியும் என்று தான் கூறவே இல்லை என்றும், சமூக ஊடகத்தில் வெளியிட, ஷாகிப் அல் ஹசன், தமிம் இக்பாலை ‘சிறுபிள்ளைத்தனமானவர்’ என்று சாடியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/E9wO8se