ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களம் கண்டார் திலக் வர்மா!

கொழும்பு: நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர்-4 சுற்றுப் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டுள்ள இளம் இந்திய வீரர் திலக் வர்மா. ஒருநாள் கிரிக்கெட்டில் அவருக்கான கேப்பை (தொப்பி) கேப்டன் ரோகித் சர்மா வழங்கியிருந்தார்.

20 வயதான திலக் வர்மா, கடந்த மாதம் நிறைவடைந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் தனது பேட்டிங் திறனை வெளிப்படுத்தி இருந்தார். இடது கை பேட்ஸ்மேனான அவரை உலகக் கோப்பை தொடருக்கான அணியில் சேர்க்க வேண்டும் என பலரும் சொல்லி வந்தனர். ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காகவும் விளையாடி வருகிறார். அயர்லாந்து தொடரிலும் இடம்பெற்றிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/SiUBznf