ஆசிய கோப்பை | தோல்விக்கு பிறகு பாபர் அஸம் - ஷஹீன் ஷா அப்ரிடி இடையே வார்த்தைப் போர்

ஆசிய கோப்பையில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறிய பிறகு பாபர் அஸம் மற்றும் ஷஹீன் ஷா அப்ரிடி இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

ஹரிஸ் ரவுஃப் மற்றும் நசீம் ஷா ஆகியோரின் காயங்களால் பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை தொடரில் பின்னடைவை சந்தித்தது. இலங்கைக்கு எதிரான போட்டியில் தோல்வி கண்டு தொடரில் இருந்தே வெளியேறியது. இதனிடையே, தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸமும், ஷஹீன் ஷா அப்ரிடியும் வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளனர் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தோல்விக்கு பிறகு அணி வீரர்கள் மத்தியில் பேசிய பாபர் அஸம், மூத்த வீரர்களின் பெர்பாமென்ஸ் குறித்து கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/clQCLwt