ஈட்டி எறிதலுக்கு எல்லையே கிடையாது என உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
ஹங்கேரியில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் ஈட்டி எறிதலில் உலக அரங்கில் உள்ள அனைத்து பட்டங்களையும் வென்று பிரம்மிக்க வைத்துள்ளார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா. டோக்கியோ ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு, டைமண்ட் லீக் தொடர்களில் 4 முறை பட்டம், டைமண்ட் லீக் சாம்பியன்ஸ் டிராபி என நீரஜ் சோப்ராவின் தங்க வேட்டை தொடர்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/CL7uqnE