“விளையாட்டை அரசியலில் கலக்கக் கூடாது” - இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு அனுமதி

கராச்சி: இந்தியாவில் நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி பங்கேற்பதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அனுமதி கொடுத்திருந்தாலும், இந்தியாவில் பங்கேற்கும் போட்டிகளின்போது பாகிஸ்தான் அணியின் பாதுகாப்பு குறித்தும் அந்நாட்டு அரசு கவலை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "விளையாட்டை அரசியலில் கலக்கக் கூடாது என்பதை பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதனடிப்படையில், இந்தியாவில் நடக்கவுள்ள ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் அணியை அனுப்பவதென்று முடிவு செய்துள்ளது. மேலும், இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளின் நிலை சர்வதேச விளையாட்டு தொடர்பான கடமைகளை நிறைவேற்றுவதில் தடையாக இருக்கக்கூடாது என்பதையும் பாகிஸ்தான் அரசு நம்புகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/H1asxbe