
கோலாலம்பூர்: உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, ஆடவர் இரட்டையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சாட்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி ஆகியோருக்கு முதல் சுற்றில் பை வழங்கப்பட்டுள்ளது.
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் வரும் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான டிரா நேற்று வெளியிடப்பட்டது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 2019-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்துவுக்கு முதல் சுற்றில் பை வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர், 2-வது சுற்றில் நேரடியாக களமிறங்குவார். எனினும் சிந்துவுக்கு இந்த தொடர் கடும் சவால் நிறைந்ததாகவே இருக்கும். எனில் அவர், தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனான், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள கொரியாவின் அன் சே யங் உள்ளிட்டோரை அடுத்தடுத்த சுற்றுகளில் சந்திக்க நேரிடும். இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவில் இருந்து சிந்து மட்டுமே கலந்துகொள்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/nXJj1ER