
பிரிஸ்பன்: பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் நைஜீரியாவை பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி. மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்திகால் இறுதி சுற்றில் கால் பதித்தது.
பிரிஸ்பன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இதையடுத்து 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டன. இதிலும் கோல்கள் அடிக்கப்படவில்லை. இதனால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுகால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/05rdUO6