ஆசியக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் சனிக்கிழமையன்று பல்லகிலே மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பாபர் அசாம், இப்திகர் அகமது நேற்று சதமெடுத்தனர். வெற்றிக்குப் பிறகு பாபர் அசாம் கூறும்போது, “இந்தியாவுக்கு எதிராகவும் இப்படி ஒரு இன்னிங்ஸை ஆடுவேன்” என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப், விராட் கோலியைக் கண்டு பாகிஸ்தான் பவுலர்கள் பயப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் அக்டோபர் 23-ம் தேதி மெல்போர்னில் 90,000 ரசிகர்கள் முன்னிலையில் நடந்த போட்டியில் விறுவிறுப்பின் உச்சம் அடைந்த ஆட்டத்தில் விராட் கோலி 53 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 82 நாட் அவுட் என்று பாகிஸ்தானை ஆட்கொண்டார். ரசிகர்களின் நெஞ்சை விட்டு நீங்கா அந்த இன்னிங்ஸை முகமது கைஃப் இப்போது பாகிஸ்தான் வீரர்களுக்கு நினைவுப்படுத்துகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/VM4WOD8