புடாபெஸ்ட்: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் மாரத்தான் போட்டியில் (42 கிலோ மீட்டர்) உகாண்டா வீரர் விக்டர் கிப்லான்கட் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றது. ஆடவர் மாரத்தான் போட்டியில் உகாண்டா வீரர் விக்டர் கிப்லான்கட், பந்தய தூரத்தை 2 மணி நேரம் 8 நிமிடங்கள் 53 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இவர் 2022-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டி மாரத்தானிலும் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/yM3htAX