பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து | நாக் அவுட் சுற்றில் மொராக்கோ: ஜெர்மனி, தென் கொரியா வெளியேற்றம்

பெர்த்: பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெற்று வருகிறது. ‘ஹெச்’ பிரிவில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் மொராக்கோ - கொலம்பியா அணிகள் பெர்த் மைதானத்தில் மோதின. இதில் மொராக்கோ 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் 45-வது நிமிடத்தில் அனிசா லஹ்மரி கோல் அடித்து அசத்தினார். மொராக்கோ அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது.
இதன் மூலம் அந்த அணி 6 புள்ளிகளுடன் தனது பிரிவில் 2-வது இடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. கொலம்பியா ஏற்கெனவே இரு ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்ததால் அந்த அணியும் நாக் அவுட் சுற்றில் கால்பதித்தது. கொலம்பியா, மொராக்கோ ஆகிய இரு அணிகளும் தலா 6 புள்ளிகளை பெற்றிருந்த போதிலும் கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் கொலம்பியா தனது பிரிவில் முதலிடம் பிடித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/SJmnh7G