தன்னை டெஸ்ட் அணியிலிருந்து நீக்கியது தன் மீதே தனக்கு சந்தேகத்தை எழுப்புகிறது என்றும், அது வெறுப்பையும், சலிப்பையும் தந்தாலும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பங்களிப்பு செய்ய தன்னிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் எஞ்சி இருக்கிறது என்றும் உணர்கிறார் புஜாரா. இதனை அண்மையில் அவர் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள புஜாரா, கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஜூன் மாதம் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆடினார்.அதில் சோபிக்கவில்லை. ஆனால், இவர் மட்டுமா சோபிக்கவில்லை? தோற்றால் யாரையாவது நீக்கி கண் துடைப்பு செய்ய வேண்டும். அதற்கான பலிகடாவாக இவரை உட்கார வைத்து விட்டனர். கேட்டால் புஜாராவைக் கடந்து செல்கிறோம் என்பார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/8k4Je6o