இரட்டைச் சதத்துக்குப் பிறகு மற்றொரு அதிரடி சதம்: மிரட்டும் பிரித்வி ஷா!

இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட்டில் நார்த்தாம்ப்டன் ஷயர் அணிக்காக விளையாடி வரும் அதிரடி இந்திய வீரர் பிரித்வி ஷா, அண்மையில் 244 ரன்களை விளாசிய பிறகு நேற்று டுர்ஹாம் அணிக்கு எதிரான ஒன் டே கோப்பை ஒருநாள் போட்டியில் மீண்டும் ஒரு அதிரடி சதம் பதிவு செய்து தன் அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார்.

முதலில் பேட் செய்த டுர்ஹாம் அணி 198 ரன்களுக்கு சுருண்டது. இலக்கை விரட்டிய நார்த்தாம்ப்டன் ஷயர் அணி 25.4 ஓவர்களில் ஓவருக்கு 7.94 என்ற ரன் ரேட்டில் 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா, 76 பந்துகளில் 15 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் 125 ரன்களை விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/fnlJNsi