
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஒன் டே கோப்பை ஒருநாள் தொடரில் சசெக்ஸ் அணிக்காக ஆடி வரும் இந்திய அணியிலிருந்து புறமொதுக்கப்பட்ட புஜாரா நேற்று சோமர்செட் அணிக்கு எதிராக 113 பந்துகளில் 117 ரன்களை விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல், 318 ரன்களை வெற்றிகரமாக விரட்டி வெற்றி பெறச் செய்துள்ளார்.
113 பந்துகளில் 117 ரன்களை 11 பவுண்டரிகளுடன் எடுத்த புஜாரா மீண்டும் மீண்டும் இங்கிலாந்து மண்ணில் கவுண்ட்டி கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் சதங்களை அடித்து வருகிறார். ஆனால் பிசிசிஐ அணித்தேர்வுக்குழுவோ, இந்திய பயிற்சியாளர்களோ, கேப்டன்களோ யாரும் புஜாராவை சீந்துவதில்லை. இங்கிலாந்து அணி கூட அவரைத் தேர்ந்தெடுத்து விடும். ஆனால் இந்திய அணியில் அவர் நுழைய முடியாது என்ற நிலையினால் யாருக்கு நட்டம் என்பதை பிசிசிஐ சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/Sr9xVAX