உலகக் கோப்பையில் இந்திய அணியின் 4-ம் நிலை வீரர் யார்? - தீரா பிரச்சினையும் கங்குலி தரும் தீர்வும்!

2019 உலகக் கோப்பைக்கு முன்பிருந்தே ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 4-ம் நிலை வீரருக்கான தேடல் இந்திய அணியில் இருந்து வருகின்றது. அம்பாத்தி ராயுடு முதல் பலரையும் இந்த டவுனில் முயற்சி செய்து ஒன்றும் தோது படாமல் போனது. 4-ம் நிலை ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், இந்த டவுனில் இறங்குபவர்கள் அணியை வெற்றிக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட இலக்கை நிர்ணயிக்க கடைசி வரை நின்று வழி நடத்திச் செல்ல வேண்டும். அதற்கு அனுபவமும், அதிரடித் திறமையும் தேவை. அதனால்தான் இந்த நிலையில் யார் என்பது பெரிய தொடர்களுக்கு முன்பாக முக்கியமான கேள்வியாக வந்து நிற்கிறது?

2007 உலகக் கோப்பையின் போது சச்சின் டெண்டுல்கரை அந்த அனுபவம் வாய்ந்த இடத்துக்கு பயன்படுத்த அப்போதைய பயிற்சியாளர் கிரெக் சாப்பல் கண்ட கனவு பொய்த்துப் போனது. சச்சின் ஒத்துழைக்கவில்லை. மாறாக தொடக்கத்தை அவரிடமிருந்து பறித்ததால் 2007 உலகக் கோப்பையிலிருந்து சடுதியில் இந்திய அணி வெளியேற நேரிட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/dipAz3t