மறக்குமா நெஞ்சம் | சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்று 3 ஆண்டுகள் நிறைவு

சென்னை: கடந்த 2020-ம் ஆண்டு இதே நாளில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அறிவித்திருந்தார். தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அவர் வழிநடத்தி வருகிறார்.

2004 முதல் 2019 வரையில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி விளையாடி உள்ளார். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என 538 சர்வதேச போட்டிகளில் தேசத்துக்காக விளையாடி 17,266 ரன்கள் எடுத்தவர் தோனி. கிரிக்கெட் உலகின் மகத்தான கேப்டன், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் ஃபினிஷர் என போற்றப்படுகிறார். அவரது தலைமையிலான இந்திய அணி 2007 ஐசிசி டி20 உலகக் கோப்பை, 2011 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/L1VHRb5