
பெங்களூரு: நடப்பு தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரில் பட்டம் வென்ற இந்திய கால்பந்து அணிக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவில் நடைபெற்று வந்த தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரில் 8 அணிகள் கலந்து கொண்டன. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் குவைத் அணிகள் பலப்பரீட்சை செய்தன. இதில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் குவைத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/A62KTRa