ODI WC 2023 | இநதய பக. உளளடட 5 அணகளகக அர இறத வயபப: சவரவ கஙகல

கொல்கத்தா: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. 10 அணிகள் கலந்துகொள்ளும் இந்த தொடரில் அரையிறுதி இடத்திற்கான போட்டியில் இருக்கக்கூடிய ஐந்து அணிகளை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பட்டியலிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரை இறுதிக்கு வரக்கூடிய அணிகளை கூறுவது கடினம். இருப்பினும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து ஆகிய அணிகளுடன் பாகிஸ்தானையும் நான் சேர்த்துக்கொள்கிறேன். நியூஸிலாந்து அணியை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது. பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றால் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியாவுடன் மோதுவதை பார்க்கலாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/J78ykD9