சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு - ஸ்டூவர்ட் பிராட் அறிவிப்பு

ஓவல்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஓவலில் நடந்த ஐந்தாவது ஆஷஸ் டெஸ்டின் 3வது நாள் முடிவில் ஸ்டூவர்ட் பிராட் தனது ஓய்வை அறிவிப்பை வெளியிட்டார். தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டியே தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி போட்டியாக இருக்கும் என ஸ்டூவர்ட் பிராட் அறிவித்துள்ளார். ஆஷஸ் தொடரின் முடிவில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுருப்பதன்மூலம் 17 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஸ்டூவர்ட் பிராட் விடைபெற இருக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/T65tlN4