பிரிட்ஜ்டவுனில் நேற்று நடைபெற்ற மகா அறுவையான முதல் ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் அணி நிர்ணயித்த 114 ரன்களை சேஸ் செய்ய இந்திய அணி சற்றே தடுமாறி 5 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
உலகக் கோப்பைக்காக வீரர்களைத் தேர்வு செய்ய மேற்கொண்ட பரிசோதனை முயற்சி இது என சொல்லப்படுகிறது. ஆனால், சஞ்சு சாம்சனை மட்டும் பரிசோதனைக்குக் கூட அணியில் சேர்ப்பதில்லை. சூர்யகுமார் யாதவ் போன்ற வீரருக்கு வாய்ப்பு என்பதை ரோகித் சர்மா சொல்லாமல் சொல்வதாக ரசிகர்கள் பலரும் தங்கள் ஆதங்கத்தை சமூக ஊடகங்களில் முன் வைக்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/froXDaw