
புதுடெல்லி: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ம் தேதி தொடங்குகிறது. போட்டியை நடத்தும் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 8-ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 15-ம் தேதி பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதுகிறது.
தற்போது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதனால் புதிய தேர்வுக்குழு தலைவரான அஜித் அகர்கர், பயிற்சியார் ராகுல் திராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட அணி நிர்வாகத்தினரை சந்திப்பதற்கான. வாய்ப்பு கிடைக்கவில்லை. மேற்கு இந்தியத் தீவுகளில் இந்திய அணியின் திறன்களை தேர்வுக்குழு உறுப்பினர் சலில் அங்கோலா பார்வையிட்டு வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/PGxViUs