மே.இ.தீவுகள் வீரர் ஜோஷ்வா டி சில்வாவின் அன்னையை சந்தித்த கோலி: நெகிழ்ச்சி தருணம்!

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: மேற்கிந்தியத் தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் ஜோஷ்வா டி சில்வாவின் தாயை சந்தித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. அந்த சந்திப்பின் போது பரஸ்பரம் இருவரும் அணைத்து தங்கள் உணர்வை வெளிப்படுத்தி இருந்தனர்.

கிரிக்கெட் உலகில் மகத்தான வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார் விராட் கோலி. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என சர்வதேச அரங்கில் ரன் வேட்டை ஆடி வருகிறார். அதன் காரணமாக அவருக்கு ரசிகர்கள் ஏராளம். அது இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் விரிந்துள்ளது. அந்த ரசிகர்களில் ஒருவர் தான் ஜோஷ்வாவின் அன்னை. இந்நிலையில், அவரை சந்தித்துள்ளார் கோலி. அது குறித்து பார்ப்போம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/x7Tpoiz