
அஜிங்கிய ரஹானேவுக்கு கடந்த மாதம் 35 வயது நிரம்பியது. ஆனால், அவரோ இன்னும் தன்னிடம் இளமை ஊஞ்சலாடுகிறது என்றும், நிறைய கிரிக்கெட் பாக்கி இருக்கிறது என்றும் தெரிவித்து தன் உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ரோஹித் சர்மாவை விட கேப்டன்சி திறமைப் படைத்த ரஹானே இப்போது ரோஹித்தின் துணை கேப்டன் என்பதுதான் நகைமுரண். நாளை டொமினிசியாவில் முதல் டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கும், மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையே தொடங்குகின்றது. ரோஹித், கோலி போன்ற தரமான பவுலிங்கை நன்றாக ஆடும் திறனை ஐபிஎல்-ல் பறிகொடுத்த வீரர்களுக்கு இந்தத் தொடர் ஒரு வரப்பிரசாதம். அதுவே ரஹானே விஷயத்தில் இது அப்படியல்ல. ஐபிஎல் பார்மை வைத்து அவர் டெஸ்ட் அணிக்குள் வந்தாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முறையே முதல் இன்னிங்ஸில் 89 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 46 ரன்களை அவர் எடுத்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/zcLdP6x