
லார்ட்ஸ்: லார்ட்ஸ் டெஸ்ட் வழக்கமான ஆஷஸ் தொடர் விறுவிறுப்புடன் நேற்று 5ம் நாளில் ஆஸ்திரேலியாவின் வெற்றியுடன் முடிந்தது. ஆனால் பென் ஸ்டோக்ஸ் அன்று ஹெடிங்லேயில் செய்ததை தனி மனிதராக இங்கும் செய்வார் என்றே ஆஸ்திரேலியாவை பதட்டமடையச் செய்தது அவரது திடீர் அதிரடி வேகம். பேர்ஸ்டோ ஆட்டமிழந்த பிறகே பென் ஸ்டோக்ஸ் ஆஸ்திரேலியாவின் ஷார்ட் பிட்ச் எகிறு பந்து உத்திகளை சிக்சர்களைப் பறக்க விட்டு சிதறடித்தார், முறியடித்தார்.
பென் டக்கெட் இரண்டாவது இன்னிங்சிலும் செஞ்சுரி வாய்ப்பைப் பறிகொடுத்தார். அவர் முதல் இன்னிங்ஸில் 98 ரன்கள் என்றாலும், 2வது இன்னிங்சில் 45/4 என்ற நிலையிலிருந்து பென் ஸ்டோக்சுடன் இணைந்து மிக முக்கியமான 132 ரன்கள் கூட்டணி அமைத்தார், 2வது இன்னிங்சிலும் பென் டக்கெட் அதிரடியாக ஆடி 112 பந்துகளில் 83 ரன்களை விளாசி ஹேசில்வுட்டின் எகிறு பந்தில் கேரியிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இங்கிலாந்து அப்போது 177/5. இந்நிலையில்தான் இங்கிலாந்தின் விதியையும் ஆஸ்திரேலியாவின் விதியையும் தீர்மானிக்கும் பென் ஸ்டோக்ஸ்-ஜானி பேர்ஸ்டோ கூட்டணி இணைந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/FZ8ojR7