கடைசி நாள் ஆட்டத்தில் பாக். அணியின் வெற்றிக்கு 83 ரன் தேவை

காலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைசி நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 83 ரன்கள் தேவையாக உள்ளன. 131 ரன்கள் இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி 4வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 48 ரன்கள் எடுத்தது.

காலே நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 312 ரன்களும் பாகிஸ்தான் அணி 461 ரன்களும் எடுத்தன. 149 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்தது. நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இலங்கை 83.1 ஓவரில் 279 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/H93DeCs