
ஜாக்ரெப்: கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் 2023 செஸ் போட்டிகள் குரோஷியா நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் ரேபிட் பிரிவு போட்டிகள் முடிவடைந்த நிலையில் பிளிட்ஸ் பிரிவில் நேற்று முன்தினம் இரவு போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான விஸ்வநாதன் ஆனந்த், குகேஷ் ஆகியோர் சரிவை சந்தித்தனர்.
விஸ்வநாதன் ஆனந்த் 9 ஆட்டங்களில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றார். சக நாட்டைச் சேர்ந்த குகேஷ் மற்றம் அமெரிக்காவின் ஃபேபியானோ கருனா ஆகியோருக்கு எதிராக மட்டுமே வெற்றியை பதிவு செய்தார் விஸ்வநாதன் ஆனந்த். குகேஷ், ருமேனியாவின் ரிச்சர்டு ராப்போர்டுக்கு எதிராக வெற்றியை பதிவு செய்த நிலையில் அதன் பின்னர் தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் தோல்விகளை சந்தித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/GmQJWCD