
மிர்பூர்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் மிர்பூர் நகரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷோர்னா அக்தர் 28,சோபனா மோஸ்தரி 23, ஷாதி ராணி 22, ஷமிமா சுல்தானா 17 ரன்கள் சேர்த்தனர்.
115 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய மகளிர் அணியானது 16.2 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/Ztvni0c