WTC Final | தோனியிடம் கீப்பிங் ஆலோசனைகளை நிறைய பெற்றேன்: கே.எஸ்.பரத்

லண்டன்: ஆஸ்திரேலிய அணியை இந்தியா கிரிக்கெட் அணி நாளை ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் இந்திய அணியின் பிரதான விக்கெட் கீப்பர் சாய்ஸாக இருக்கும் கே.எஸ்.பரத், அனுபவ வீரரும், சீனியருமான தோனியிடம் இருந்து விக்கெட்கீப்பிங் சார்ந்த ஆலோசனைகள் அதிகம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“அண்மையில் முடிந்த ஐபிஎல் சீசனின் போது தோனியுடன் பேசி இருந்தேன். இங்கிலாந்தில் அவரது விக்கெட் கீப்பிங் அனுபவத்தை அப்போது என்னிடம் அவர் பகிர்ந்து கொண்டார். அதே நேரத்தில் பொதுவாக விக்கெட் கீப்பர்களுக்கு தகுந்த சில விஷயங்கள் குறித்தும் பேசினார். அது நல்லதொரு உரையாடலாக அமைந்தது. அதிலிருந்து நான் நிறைய உள்ளார்ந்த படிப்பினை பெற்றேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/gbmziZj