
ஓவல்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 76/3 என்ற நிலையிலிருந்து இந்திய அணி பிடியை நழுவ விட்டதற்குக் காரணங்கள் மூன்று. ஒன்று, உணவு இடைவேளைக்குப் பிறகு ஊக்கமற்ற சொத்தை பவுலிங் வீசியது, இரண்டாவது ரன் தடுப்பு உத்தியுடன் களவியூகம் அமைத்த ரோஹித் சர்மாவின் சிந்தனையற்ற கேப்டன்சி, மூன்றாவது பிட்சை சரிவர புரிந்து கொள்ளாமல் உலகின் நம்பர் 1 ஸ்பின்னர் அஸ்வினை உட்காரவைத்தது போன்ற தவறுகளே.
76/3 என்ற நிலையிலிருந்து ஸ்மித் (95 நாட் அவுட்), இவரை விட ஆக்ரோஷ அதிரடி பேட்டிங் செய்து ஆடிவரும் ட்ராவிஸ் ஹெட் (146 நாட் அவுட்) சேர்ந்து 60 ஓவர்களில் 251 ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்த்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/Q5jJXqP