
‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என சொல்வதுண்டு. இன்று உலக தந்தையர் தினம். பெரும்பாலான பிள்ளைகள் தங்களது தந்தையை போற்றி பாடி கொண்டாடும் நாள். ‘நண்பன், வழிகாட்டி, ஹீரோ’ என அப்பாக்கள் தான் ஒவ்வொருவருக்கும் முதல் இன்ஸ்பிரேஷன். இது சாமனியர்கள் முதல் பிரபலங்கள் வரை பொருந்தி போகிற ஒன்று. அந்த அளவுக்கு தந்தை எனும் உறவின் பந்தம் உன்னதமானது.
தனக்கு கிடைக்காததை தனது பிள்ளைகள் பெற வேண்டும் என விரும்பும் உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள் தகப்பன்சாமிகள் தான். அது எப்படி என்றால் தனது கனவுக்கு, தனது பிள்ளை மூலம் உயிர் கொடுப்பது அல்லது தங்களது பிள்ளைகளின் கனவுக்கு தாங்கள் பக்கபலமாக நின்று அதற்கு உயிர் கொடுப்பது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/Zzl6qOw