
கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி மீண்டும் பார்சிலோனா அணியில் இணைந்து விளையாட விரும்புவதாக அவரது தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பார்சிலோனா கிளப் அணியின் தலைவர் ஜோன் லபோர்தாவுடன், ஜார்ஜ் மெஸ்ஸி பேசியுள்ளார்.
“லியோ (மெஸ்ஸி) மீண்டும் பார்சிலோனா அணிக்கு வர விரும்புகிறார். எனக்கும் அவர் அதை செய்வதில் விருப்பம் உள்ளது. நிச்சயம் இந்த நகர்வை எங்கள் தரப்பில் முன்னெடுப்போம்” என பத்திரிகையாளர் ஒருவரிடம் ஜார்ஜ் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/DlGJnNi