
பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் கே.எல்.ராகுல், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்திறனை தகவமைக்கும் வகையில் பயற்சியை தொடங்கியுள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
31 வயதான ராகுல், அண்மையில் முடிந்த ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வழிநடத்தி இருந்தார். பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் அவர் காயமடைந்தார். அதனால் ஐபிஎல் சீசனின் எஞ்சிய போட்டிகள் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்தும் அவர் விலகினார். அவருக்கு வலது தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/InbqfMi