சந்தேகத்தின் பலனை பேட்டருக்குச் சாதகமாக்கும் மரபு எங்கே போனது?- சுப்மன் கில் அவுட் சர்ச்சை குறித்து சில கேள்விகள்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 4ம் நாள் ஆட்டம் பரபரப்பான கட்டத்தில் சர்ச்சையுடன் முடிய, 5-ம் நாள் ஆட்டம் உச்சக்கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாகச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில் 444 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இந்திய அணி நேற்றைய ஆட்ட முடிவில் 164/3 என்ற நிலையில் உள்ளது. விரட்ட நினைத்தால் விரட்டலாம். என்ன ரிஷப் பண்ட் இல்லை. ஒரு பெரிய கூட்டணி, டெய்ல் எண்டர்களிடமிருந்து சீரியசான பங்களிப்பு இருந்தால் அன்று கவாஸ்கர் & கோ சாதிக்க முடியாததை இன்று ரோஹித் அண்ட் கோ நிச்சயம் சாதிக்கவே முடியும்.

இன்று 280 ரன்கள் தேவை. 90 ஓவர்கள் உள்ளன. இந்தப் பிட்சில் விரட்டுவது மிக மிகக் கடினமே, அதே போல் ஆஸ்திரேலியா விக்கெட்டுகளை அத்தனை எளிதாக எடுத்து விடவும் முடியாது, நாமே கையில் தூக்கிக் கொடுக்காமல் இருந்தால், வீரர்கள் தங்கள் விக்கெட்டுகளுக்கு அதிக மதிப்பு கொடுத்து ஆடினால் ஆஸ்திரேலியாவின் வயிற்றில் புளியைக் கரைக்கும் இறுதி நாளாக இது மறக்க முடியாத ஒரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தினமாக அமையும். நிற்க.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/BCvNGkx