Bazball | “அதிரடி கண்டு அஞ்சவில்லை; இங்கிலாந்து பேட்டர்களின் பலவீனங்கள் மாறவில்லை” - ஆஸி. பயிற்சியாளர்

சமீப காலமாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் கூட்டணியில் இங்கிலாந்து அணி புத்தெழுச்சி கண்டுள்ளதற்குக் காரணம் ‘டெஸ்ட் கிரிக்கெட்டாக இருந்தால் என்ன... எவனா இருந்தால் என்ன..’ என்ற அதிரடி தைரிய பேட்டிங் அணுகுமுறையே. ஆனால், யார் இங்கிலாந்தைப் பார்த்து பயந்தாலும் நாங்கள் பயப்பட மாட்டோம் என்று ஆஷஸ் தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் மெக் டொனால்டு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன் முடிந்த அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கூட இங்கிலாந்து 524 ரன்களை ஓவருக்கு 6 ரன்களுக்கும் மேல் என்ற விகிதத்தில் எடுத்தது. இவையெல்லாம் ஆஸ்திரேலியா கண்ணுக்கு முன்னால் வந்து போகும்தானே, அதனால்தான் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ‘பாஸ்பால்’ அணுகுமுறைப் பற்றி பயமில்லை என்கிறார். அயர்லாந்தின் பவுலிங் டீசன்டாக இருந்ததே தவிர அச்சுறுத்தலாக இல்லை. எனவே, ஆஸ்திரேலிய பந்து வீச்சை இப்படியெல்லாம் அடிக்க முடியாது என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் கெக்கலி கொட்டி வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/KtWXh9u