
ஐபிஎல் கிரிக்கெட்டை விடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னதாக 20-25 நாட்கள் தயாரிப்பு கால அவகாசம் வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதற்கு ரவி சாஸ்திரி பதிலடி கொடுத்துள்ளார்.
ஆனால், ரோஹித் சர்மா ஷெட்யூல் மீது குறைகூறுவது போல் கூறினார் என்றால் ரவிசாஸ்திரி தனிப்பட்ட முறையில் வீரர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்கிறார். ஒருமுறை தென் ஆப்பிரிக்கா தொடருக்குச் செல்லும் முன் இந்திய அணி அவமானகரமாகத் தோற்று விடக்கூடாது என்பதற்காக அப்போதைய பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் சில வீரர்களை முன் கூட்டியே தென் ஆப்பிரிக்கா அழைத்துச் சென்று பிட்ச், வானிலை உள்ளிட்ட புறச்சூழலுக்கு வீரர்களை மனரீதியாகத் தயார்படுத்தினார். ஆனால், இன்றைய பிசிசிஐ பல்வேறு வர்த்தகங்களின் முகமைதாரராகவும், முகமை மையமாகவும் மாறிவிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/evBZTAG