சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. மழை அச்சுறுத்தலுக்கு மத்தியில் டக்வோர்த் லூயிஸ் முறையில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசாத்திய வெற்றி பெற்றுள்ளது சிஎஸ்கே. 15 ஓவர்களில் 171 ரன்கள் என்ற இலக்கை சென்னை வெற்றிகரமாக எட்டியது. இறுதிப் போட்டியில் ரன் விரட்டலின் போது 25 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அசத்திய டேவன் கான்வே, ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்தச் சூழலில் 2023 சீசன் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு விருது கொடுத்து அங்கீகரித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மற்றும் சிறந்த கள செயல்பாடு என பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் அடங்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/nXNQHDv