
டெல்லி: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 181 ரன்களைச் சேர்த்துள்ளது.
16வது ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றன. இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியும் பெங்களூரு அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஃபாப் டு பிளெசிஸ், விராட் கோலி இணை 10 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி ரன்களைச் சேர்த்தனர். 11வது ஓவரில் ஃபாப் டு பிளெசிஸ் 45 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த மேக்ஸ்வெல் அதே ஓவரில் டக்அவுட்டானார். 15 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த விராட் கோலியை 55 ரன்களுடன் முகேஷ் குமார் வெளியேற்ற 16 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி 137 ரன்களைச் சேர்த்திருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/yvkdpbx