
புதுடெல்லி: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 77 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிருத்விஷா தொடக்கத்திலேயே 5 ரன்களுடன் கிளம்பினார். வழக்கம் போல டேவிட் வார்னர் நங்கூரமிட்டு ஆட, மறுபுறம் வந்த பிலிப் சால்ட் 3 ரன்களிலும், ரிலீ ரோசோவ் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டாகினர். தீபக் சாஹர் வீசிய 5ஆவது ஓவரில் மட்டும் இந்த இரண்டு விக்கெட்டுகளை இழந்தது டெல்லி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/oJCxGmZ