
அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ரன்கள் என்ற அதிரடி ஸ்கோரை எட்டிய பிறகு லக்னோவை 171 ரன்களில் முடக்கியது. இந்த இன்னிங்சில் இந்திய அணியினால் புறக்கணிக்கப்பட்ட விருத்திமான் சாஹாவின் டி20 இன்னிங்ஸ் பலவிதங்களில் ஆச்சரியமேற்படுத்தியதோடு, விராட் கோலி ஏன் இப்படி ஆட முடியவில்லை என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
43 பந்துகளை சந்தித்த விருத்திமான் சாஹா, 10 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 81 ரன்களை விளாசித் தள்ளினார். மறுமுனையில் ஷுப்மன் கில் இன்னும் ஆக்ரோஷமாக ஆடி 51 பந்துகளில் 2 பவுண்டரிகள், 7 சிச்கர்களுடன் 94 ரன்கள் எடுத்தார். இருவரும் சேர்ந்து 12 ஓவர்களில் 142 ரன்களை விளாசி நல்ல அதிரடி அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/eo5Oidu