சிஎஸ்கே - லக்னோ ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது: இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிப்பு

லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகனா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். மழை காரணமாக ஆட்டம் 15 நிமிடங்கள் தாமதமாகவே தொடங்கியது. சிஎஸ்கே அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஆகாஷ் சிங்கிற்கு பதிலாக காயத்தில் இருந்து குணமடைந்த தீபக் சாஹர் களமிறங்கினார். லக்னோ அணியில் கேப்டன் கே.எல். ராகுல் காயம் காரணமாக களமிறங்காததால் கிருணல் பாண்டியா அணியை வழிநடத்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/uWQKCeP