
கிரிக்கெட் உலகின் சமீபத்திய பேச்சு கோலி - கம்பீர் மோதலாகும். இதற்குக் காரணம் விராட் கோலி. அவர் நவீன் உல் ஹக் என்ற ஆப்கான் வீரர் மீது வசைமாரி பொழிய அவரும் ஏதோ சொல்ல கடைசியில் கம்பீர்-கோலி மோதலாக இது பரிணாமம் அடைந்தது.
கோலி களத்தில் செய்யும் கோணங்கித்தனங்களை அனைவரும் அறிவார்கள். பவுலர் விக்கெட் வீழ்த்தும் பந்தை வீசுகிறார், பீல்டர் கேட்சை எடுக்கிறார், பேட்டர் வெளியே செல்கிறார். இதில் கோலியின் பங்கென்ன? இவர் குதிப்பதும் நெஞ்சைக் குத்திக் கொள்வதும் ஆவேசம் காட்டுவதும் ஹிஸ்டீரியா வந்தவர் போல் செயல்படுவதும் ஏன் என்ற கேள்வி அவர் கேப்டனாக இருந்த போதே நாம் பார்த்ததுதான். தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர்களை ஒப்பிடும்போது நிதியாதாரங்களில் வலுவானவர் விராட் கோலி. ஆனால் இவரோ தெம்பா பவுமா போன்ற வீரரை போய் ஸ்லெட்ஜ் செய்வது என்ன நியாயம்? இவர் ஒரு பெரிய ஆளுமை, இளையோருக்கு வழிகாட்டி என்பதையெல்லாம் மறந்து மைதானத்தில் முதிர்ச்சியற்றுச் செயல்படுவது பல முறை கடும் கண்டனத்திற்குள்ளானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/IPy3VmT