ரசிகர்களுக்காக வேண்டி தன்னலமற்றவராக இருப்பதை தோனி நிறுத்திக்கொள்ள வேண்டும்!

‘திரை தீ பிடிக்கும்
வெடி வெடிக்கும்
ஒருத்தன் வந்தா பட நடுங்கும்’
எனும் திரைப்பட பாடல் வரிகள் அப்படியே கச்சிதமாக பொருந்திப் போகும் ஒரு நபர் என்றால், அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிதான். அவரது ஆட்டத்தை மைதானம், தொலைக்காட்சி, ஓடிடி ஸ்ட்ரீமிங் தளம் என அனைத்து தளங்களிலும் பார்க்க டிமாண்ட் அதிகம். அதற்கு நடப்பு ஐபிஎல் சீசனையே உதாரணமாக சொல்லலாம். அதுவும் அவர் பேட் செய்ய வருகிறார் என்றால் போதும், அவருக்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு தனித்துவ மிக்கதாக இருக்கும். ‘தோனி, தோனி’ என ரசிகர்களின் முழக்கம் வழக்கத்தை காட்டிலும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

அவர் களம் காணும்போது தங்கள் செல்போனில் அந்தக் கண்கொள்ளா காட்சியை அப்படியே படம் பிடித்து ‘தல தரிசனம்’ என ஸ்டேட்டஸ் வைப்பது ரசிகர்களின் வழக்கம். ‘ஜெயிக்குறோமோ, தோக்குறோமோ அவர் களத்திற்கு பேட் செய்ய வந்தா மட்டும் போதும்’ என சொல்லும் தோனியின் ரசிகர்கள்தான் அதிகம். அப்படி ஒரு காந்த சக்தியை அவர் தன்வசம் வைத்துள்ளார். அவர் பேட் செய்கிறார் என்றால் பார்க்கின்ற வேலையை அப்படியே நிறுத்திவிட்டு ‘கண் கொட்டாமல்’ பார்க்கும் ரசிகர்கள் கோடான கோடி. இத்தனை இருந்தும் நடப்பு சீசனில் அவரது ஆட்டம் ‘கேமியோ’ ரகமாக அமைந்திருப்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமே.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/zPLIu29