உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஹர்திக் பாண்டியா தேவை!

லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7-ம் தேதி நடைபெறவிருக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றிருக்க வேண்டும். ஹர்திக் பாண்டியா ஒரு ஆல்ரவுண்டராக அணியில் சேர்க்கப்படும்போது பவுலிங், பேட்டிங் இரண்டுமே வலுவடையும். ஏன் இந்திய அணித் தேர்வுக்குழு இந்தக் கோணத்தில் யோசிக்கவில்லை என்பது புரியவில்லை.

ஹர்திக் பாண்டியா 2018-க்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை. அவரது காயங்கள் அவரை டெஸ்ட் அணியிலிருந்து விலக்கி வைக்க பிரதான காரணமாக இருந்தாலும், ஹர்திக் பாண்டியாவே டெஸ்ட் போட்டிகளில் அவ்வளவு ஆர்வம் காட்டுபவராகவும் தெரியவில்லை. ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக தொடர்ந்து 2-வது இறுதிப் போட்டிக்கு அணியை அழைத்துச் சென்றதோடு அனைத்துப் போட்டிகளிலும் பந்து வீசினார், நல்ல வேகத்திலும் வீசியதைப் பார்க்க முடிந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/HJaWheT