மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: சபலென்கா சாம்பியன்

மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த திங்கள்கிழமை (மே 1) தொடங்கியது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரை இறுதியில் சபலென்காவும், கிரீஸ் நாட்டின் மரியா சக்காரியும் மோதினர். இதில் சபலென்கா 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றுக்கு இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/IpyhGNM