
கோவில்பட்டி: ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பில் கோவில்பட்டியில் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பை மாநில ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன் போட்டி நடந்தது. போட்டியில் 35 அணிகள் கலந்துகொண்டன. போட்டிகள் லீக் முறையில் நடத்தப்பட்டன. இதில், தேர்வு பெற்ற அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்றன.
இதில் தூத்துக்குடி, ராமநாதபுரம், சென்னை, மதுரை மாவட்ட அணிகள் வெற்றி பெற்றன. இதைத் தொடர்ந்து நேற்று காலை அரையிறுதி போட்டிகள் நடந்தன. முதல் போட்டியில் தூத்துக்குடி அணியுடன் ராமநாதபுரம் அணி மோதியது. இதில், 3-1 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி அணி வெற்றி பெற்றது. அடுத்த நடந்த போட்டியில் சென்னை அணியும், மதுரை அணியும் மோதின. இதில், 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றிபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/oIHABGi