
மொகாலி: நடப்பு ஐபிஎல் சீசனில் அடுத்தடுத்து இரண்டு அரைசதங்களை பதிவு செய்து இழந்த ஃபார்மை மீட்டெடுத்துள்ளனர் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ். இதன் மூலம் பந்து வீச்சாளர்கள் தனக்கு பந்துவீசுவது மிகவும் சவாலான காரியம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
அண்மைய நாட்களாக சர்வதேச கிரிக்கெட்டில் அவரது ஆட்டம் மோசமாக இருந்து வந்தது. இது நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் சில ஆட்டங்களில் பிரதிபலித்தது. ஆனால், அவரது ஃபார்மை மீட்டெடுக்க ஒரே ஒரு நல்ல இன்னிங்ஸ் மட்டும்தான் அவருக்கு தேவைப்பட்டது. அந்த இன்னிங்ஸ் பஞ்சாப் அணிக்கு எதிராக கடந்த ஏப்ரல் 22-ம் தேதி அன்று அவருக்கு கிடைத்தது. அதற்கு முன்பு கொல்கத்தா அணிக்கு எதிராக 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால், அவர் நல்ல ரிதத்தில் தன்னை செட் செய்து கொண்டது பஞ்சாப் அணியுடனான இன்னிங்ஸிற்கு பிறகு தான். அதன் பின்னர் எதையும் கருதாமல் ‘காட்டடி’ அடித்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3ZrwieN