
காத்மாண்டு: நடப்பு ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளது நேபாள கிரிக்கெட் அணி. இந்த நிலையில் அந்த அணியின் கேப்டன் ரோஹித் பவுடல் (Rohit Paudel) பெருமையுடன் தனது உணர்வினை பகிர்ந்துள்ளார்.
வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 6 அணிகள் பங்கேற்கின்றன. அதில் ஆறாவது அணியாக நேபாளம் இணைந்துள்ளது. ‘ஏசிசி ஆடவர் ப்ரீமியர் கோப்பை’ தொடரில் சாம்பியன் பட்டம் வென்று ஆசியக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது நேபாள அணி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/fU8sdyB